26.03.2015 ONE DAY STRIKE News Flash

Saturday, February 28, 2015

அஞ்சல் நான்கின் முதல் தமிழ்மாநில செயற்குழு


முதல் மாநில சங்க செயற்குழு சென்னையில் கூடியது

பிப்ரவரி 28 & மார்ச் 1, 2015

அன்புள்ள தோழர்களே, 

திருப்பூர் நகரில் சென்ற ஆண்டு அக்டோபர்  மாதம் கூடிய மாநில சங்கத்தின் மாநாட்டிற்கு பின்பு நம் மாநில செயற்குழு முதன் முறையாக சென்னை நகரில் மாநில சங்கத் தலைவர் அன்புத் தோழர் N.ஜெயராஜன் தலைமையில் கூடியது. 

வீரமிக்க கோஷங்களுடன் நடந்தேறிய கொடியேற்ற நிகழ்ச்சிக்குப் பின்பு - மாநில துணைச் செயலர் தோழர் ஜோதிமணி வரவேற்புரையுடன் -அனைத்திந்திய சங்கத்தின் பொதுச்செயலரும், NFPE சம்மேளனத்தின் துணை மாபொதுச் செயலருமான அன்புத் தோழர் ஆர்.சீதாலட்சுமி அவர்களின் துவக்கவுரையுடனும் - மாநிலச் செயலரின் செயலறிக்கை மற்றும் அதன்  மீதான கருத்தாழமிக்க செயற்குழு உறுப்பினர்களின் விவாதங்களுடனும் - முதல் நாள் துவக்க நிகழ்ச்சி நம் மாநில சங்கத்தின் பாரம்பரியத்தை நிலைநிறுத்தியது. தோழர்கள் அ.க.பசுபதி; கே.ராகவேந்திரன்; கே.சிவராமன்; எல்.புருஷோத்தமன்; டி.சிவகுருநாதன்; எஸ்.கருணாநிதி உள்ளிட்ட வழிகாட்டிகள் மற்றும் இயக்கத்தின்  தலைவர்கள் தோழர்கள் எஸ்.ரகுபதி (ASG NFPE); திருமகன் (AGS CHQ) உள்ளிட்டோர் மேடையில் இருக்க முதல்நாள் நிகச்சிகள் சிறப்பாக அமைந்தன.  

மாநில செயற்குழுவின் சில நிழற்படங்கள் 



தோழர் அ.க.பசுபதி தேசியக்கொடி ஏற்றுதல்


தோழர் ஆர்.சீதாலட்சுமி பொதுச்செயலர் சங்கக் கொடி ஏற்றுதல்



தோழர் கே.ராகவேந்திரன் சம்மேளனக்கொடி ஏற்றுதல்



வீரமிக்க கோஷங்கள்


மாநிலத் தலைவர் தோழர் என்.ஜெயராஜன் தலைமையுரை

துணை  மாநிலச் செயலர் தோழர் ஜோதிமணி வரவேற்புரை

மறைந்த தலைவர் எஸ்.கே.வியாஸுக்கு அஞ்சலி

தலைவர் எஸ்.கே,வியாஸ் நினைவுக்கு மவுன அஞ்சலி

மேடையில் தலைவர்கள் மவுன அஞ்சலி செலுத்துக் காட்சி

பொதுச்செயலர் தோழர் ஆர்.சீதாலட்சுமி துவக்கவுரை

பொதுச்செயலர் துவக்கவுரையின் போது மேடையின் ஒரு காட்சி

மாநில செயற்குழு மேடை

மாநில செயற்குழு உறுப்பினர்கள்

மாநிலச் செயலர் தோழர் ஜி.கண்ணன் செயலறிக்கை முன்வைத்து உரை

மேடையில் தலைவர்கள்

மாநிலப் பொருளாளர் நிதிநிலை அறிக்கை முன்வைத்தல்

மாநில செயற்குழு உறுப்பினர்கள்







No comments:

Post a Comment